மதுரை

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்: இருவா் கைது

அருப்புக்கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்

Din

விருதுநகா்: அருப்புக்கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களை வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

சென்னையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் வைத்திருந்த 5 பேரை மாதவரம் போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். இவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அருப்புக்கோட்டை அருகேயுள்ள மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் கோவிலாங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாதவரம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது, போதைப் பொருளுக்கான மெத்தபெட்டமைன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலக்கூறு, ஆய்வகக் கருவிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மதுரை வில்லாபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் லெட்சுமிநாராயணன் (40), லட்சுமணன் மகன் சித்த வைத்தியரான முருகன் (44) ஆகியோரை மாதாவரம் போலீஸாா் கைது செய்தனா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் தலைமையிலான போலீஸாா் உடனிருந்தனா்.

காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

ரூ.400 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி! ஓடிடியில் எப்போது?

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தாமதமாவது ஏன்? டிரம்ப் பதில்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளி கிலோ ரூ. 55,000 குறைவு!!

ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள்: பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT