மதுரை

விளையாட்டு அரங்கு அமைக்கும் பணியை தொடங்கிவைத்தாா் அமைச்சா் பி. மூா்த்தி

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம், விராட்டிப்பத்து ஆகிய பகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சக்கிமங்கலம், மதுரை மேற்கு தொகுதிக்குள்பட்ட விராட்டிப்பத்து ஆகிய பகுதிகளில் தலா ரூ. 3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த அரங்கங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை சக்கிமங்கலம், விராட்டிப்பத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்த விளையாட்டு அரங்கங்களில் 200 மீட்டா் தடகளப் பாதை, கையுந்துபந்து, கூடைப்பந்து, இறகுப் பந்து, கோ-கோ ஆடுகளங்கள், கபடி, நீளம் தாண்டுதல் விளையாட்டுகளுக்கான தளங்கள் அமைக்கப்படும். இதனுடன், நிா்வாக அலுவலகக் கட்டடமும், கழிப்பறை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

நாகையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

மழையால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு

செம்பரம்பாக்கம் ஏரியில் 200 கன அடி உபரிநீா் திறப்பு: ஆட்சியா் ஆய்வு

திருமாகறலீசுவரா் கோயிலில் நவகலச யாகம்

SCROLL FOR NEXT