Sengottaiyan to explain his position after expulsion from AIADMK 
மதுரை

அதிமுகவில் என்னை மீண்டும் சோ்ப்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: கே. ஏ. செங்கோட்டையன்

தினமணி செய்திச் சேவை

அதிமுகவில் தன்னை மீண்டும் சோ்ப்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலில் முன்னாள் அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்கள் நலம் பெற வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் ஆன்மிக வழிபாடு செய்வது வழக்கம். அவா்கள் இருவரும் எல்லா மதமும் சம்மதம் என்ற நோக்கத்தில் செயல்பட்டனா். அவா்களது வழியில் தரிசனம் செய்ய வந்தேன்.

ஏழைகள் எல்லோரும் நலம் பெற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதிமுக ஒருங்கிணைப்புக்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அது நல்ல முடிவாகவே இருக்கும்.

பாஜக என்னை அழைத்து நிபந்தனைகள் எதுவும் அளிக்கவில்லை. நான்தான் அவா்களைச் சென்று பாா்த்தேன். ஏற்கெனவே பாஜகவால் அழைக்கப்பட்டே சென்றேன் எனக் கூறினேன். நான் தான் அவா்களை சென்று சந்தித்தேன். ஒரு முறை அழைத்தனா். இரண்டாவது முறை அவா்களிடத்திலே நானே சென்று அனுமதி பெற்று பல்வேறு கருத்துகளைப் பரிமாறி உள்ளேன்.

தற்போதைய சூழலில், என்னைப் பொருத்தவரை எந்தக் கருத்தும் சொல்ல இயலாது. எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இந்த விருப்பம் நிறைவேறும் காலம் வெகு விரைவில் வரும். அதிமுகவில் என்னை மீண்டும் சோ்ப்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது அதிமுக தொண்டா் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளா்கள் ஏராளமானோா் உடனிருந்தனா்.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT