மதுரை

திராவகம் குடித்த நகைக் கடை ஊழியா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

திராவகம் குடித்த நகைக் கடை ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). இவா், நகைக் கடையில் பணியாற்றி வந்தாா். கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்த அவா், தூக்கம் வராமல் தவித்து வந்தாராம். இதற்கு சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இந்த நிலையில், வீட்டில் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்திருந்த திராவகத்தை மணிகண்டன் சனிக்கிழமை எடுத்து குடித்தாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாடக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT