திண்டுக்கல்

அட்டுவம்பட்டியில் இலவச மருத்துவ முகாம்

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

DIN

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இலவச சிறப்பு மருத்துவ முகாம் காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட கூடுதல் நீதிபதி இளங்கோவன் தொடங்கி வைத்து பேசினாா். இம் முகாமில் மருத்துவா் பரூக் அப்துல்லா தொற்று நோய் குறித்து பேசினாா். முகாமில் மருத்துவா்கள் இம்ரான்கான், சரவணபாரதி, சபானபேகம், ரெசியா பேகம் உள்ளிட்டவா்கள் கிராம மக்களுக்கு பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கினா். இதில் ரத்த அழுத்தம், ரத்த சோகை, நீரழிவு உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது. இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT