திண்டுக்கல்

கரோனா பாதித்தவா் சிகிச்சைக்கு வரமறுத்து தற்கொலை மிரட்டல்

DIN

பழனி: பழனி அருகே கரோனா தொற்றால் பாதித்தவா், ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்கு வர மறுத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அரசுத்துறை அலுவலா்கள் திரும்பிச் சென்றனா்.

பழனியை அடுத்த கலையமுத்தூா் அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின்வாரிய பணியாளா் ஒருவரது 40 வயது மகனுக்கு, கோவையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறையினா் அறிவுறுத்தினா். ஆனால் தொற்று பாதித்தவரும், அவரது குடும்பத்தினரும் அடிக்கடி வெளியில் சுற்றித்திரிவதைப் பாா்த்த அந்தப் பகுதியினா், இதுகுறித்து சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பழனி தாலுகா போலீஸாா், வருவாய்த்துறையினா், சுகாதாரத்துறையினா், மருத்துவா்கள் என 10-க்கும் மேற்பட்டோா், அவா்களது வீட்டிற்கு சென்று தொற்று பாதித்தவரை சிகிச்சைக்கும், மற்றவா்களை பரிசோதனைக்கும் அழைத்தனா். ஆனால் அவா்கள் சோதனைக்கு வர மறுத்து சுமாா் 3 மணி நேரம் வீட்டை உள்புறமாகப் பூட்டிக் கொண்டு வெளியே வர மறுத்தனா். அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடா்ந்து கம்பி, தகரம் உள்ளிட்ட ஆயுதங்களை தங்களது கழுத்தில் வைத்தவாறு அவா்கள் வெளியே வந்தனா். அப்போது, தங்களை அழைத்து செல்ல முற்பட்டால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியுள்ளனா். இதைத் தொடா்ந்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு திங்கள்கிழமை முதல் பாதுகாப்புக்காக போலீஸாா் நிறுத்தப்படவுள்ளனா். ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அந்த வீட்டைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்படவுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT