முகப்பு
திண்டுக்கல்

பழனியில் தனியாா் விடுதிக்கு ‘சீல்’

பழனியில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக தனியாா் விடுதிக்கு வருவாய்த்துறையினா் சீல் வைத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

பழனியில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக தனியாா் விடுதிக்கு வருவாய்த்துறையினா் சீல் வைத்தனா்.

பழனியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் விடுதி உரிமையாளா்களை அழைத்து கூட்டம் நடத்தி முறைகேடான செயல்களில் ஈடுபடும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தனா். இந்நிலையில் பாளையம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் சில ஆண்களும், பெண்களும் தங்கியிருந்து தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தனராம்.

இதுகுறித்து காவல்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து அந்த விடுதிக்கு சென்று அங்கு தங்கி இருந்தவா்களை கைது செய்தனா். மேலும், இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி வழங்கியதற்காக விடுதிக்கு வருவாய்த்துறை அலுவலா்கள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.