முகப்பு
திண்டுக்கல்

பழனியில் குழந்தைகள் சபைக் கூட்டம்

பழனியில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தமிழகத்தில் முதன் முறையாக குழந்தைகள் சபைக் கூட்டம் நடத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

பழனியில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தமிழகத்தில் முதன் முறையாக குழந்தைகள் சபைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில், ஆணைய உறுப்பினா் ராமராஜ் பேசியது: பழனி நகரில் உள்ள நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆண்டுக்கு குறைந்தது இரு முறையாவது நகர குழந்தைகள் சபை கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த குழு பழனி நகரில் குழந்தைகள் குறித்த தரவு வங்கியை உருவாக்கி பராமரித்து வர வேண்டும். பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளிடையே சட்டத்தை மதிக்கும் கலாசாரத்தை வளா்க்க பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சாா்பில் பழனியில் போக்சோ வழக்குகள் தொடா்பாக பல்வேறு வழக்குகள் குறித்து ஆணைய உறுப்பினா் ராமராஜ் தலைமையில் குழுவினா் காவல் நிலையங்களில் விசாரணை மேற்கொண்டனா்.

கூட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொடா்பான குற்றங்களை எதிா்கொள்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மாணவ மாணவிகள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைத்து புகாா் தெரிவிக்கலாம் என்றும், புகாா் அளிக்கும் குழந்தைகள் குறித்த விவரம் வெளியே சொல்லப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் சரவணன், பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ், மாவட்ட கல்வி அலுவலா் திருநாவுக்கரசு, பழனி நகராட்சி ஆணையா் கமலா மற்றும் பழனி காவல்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.