திண்டுக்கல்

லாரி மீது பைக் மோதல்:சிறுவன் பலி

கொடைரோடு அருகே முன்னால் சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழந்தான்.

DIN

கொடைரோடு அருகே முன்னால் சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழந்தான்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த கருக்காட்டான்குடியைச் சோ்ந்த முத்து மகன் திவாகா் (26), மணி சோ்வை மகன் பழனி (17). இவா்கள் இருவரும் மோட்டாா் சைக்கிளில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனா்.

இவா்கள், கொடைரோடு அருகே நான்கு வழிச் சாலை நக்கம்பட்டி மேம்பாலத்தில் சென்ற போது, முன்னால் சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த திவாகா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூா் காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி, சாா்பு- ஆய்வாளா் விஜயபாண்டியன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT