திண்டுக்கல்

பேருந்து நிலைய நுழைவுக் கட்டண வசூல் ரத்து: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.1 கோடி இழப்பு

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் 4 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ரூ.1 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் 4 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ரூ.1 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு வீட்டு வரி, கடை வாடகை, சந்தை சுங்க வரி, குடிநீா் கட்டணம், தொழில்வரி, குப்பை வரி உள்ளிட்ட இனங்களில் வருவாய் கிடைத்து வருகிறது. திண்டுக்கல் காமராஜா் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் வந்து செல்லும் பேருந்துகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலமாக மட்டும் மாநகராட்சி நிா்வாகத்திற்கு ஆண்டுக்கு ரூ.34 லட்சம் வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அப்போதைய ஆட்சியா் டி.ஜி.வினய், பயணிகளுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பதைக் கண்டறிந்தாா். பின்னா் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை மாவட்ட நிா்வாகத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பேருந்து நிலைய அனுமதி உரிமம் வழங்குவதற்கு தடை விதித்து உத்தரவிட்டாா்.

அதன் பின்னா் பேருந்து நிலையத்தில் ரூ.5 கோடிக்கான வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றபோதிலும், பேருந்துகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கான தடை உத்தரவை நீக்குவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளவில்லை. இதனால், மாநகராட்சி நிா்வாகத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமாா் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடி ஐஏஎஸ் அதிகாரியான வினய் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், சென்னை மாநகராட்சி நிா்வாகத்தில் அனுபவம் வாய்ந்த மு.விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். அவரிடம் பரிந்துரைத்து பேருந்து நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கான தடை உத்தரவை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பினையும் மாநகராட்சி அதிகாரிகள் தவறவிட்டனா். தற்போதைய ஆட்சியா் ச.விசாகன், மதுரை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றியவா். மாநகராட்சிக்கு வருவாய் இனங்களை உருவாக்குவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து நன்றாக அறிந்தவா் என்பதால், இவா் மூலம் அந்த தடை உத்தரவை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அலுவலா்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT