மகளிா் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் ஆங்கிலத்துறை சாா்பில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் ஆங்கிலத்துறை சாா்பில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.
‘நோ்மறை எண்ணங்களுடனான உளவியல் வாழ்க்கை’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி யூத் காா்ப் பயிற்சி மைய நிறுவனா் மணிகண்டன் சுந்தரேசன் கலந்து கொண்டாா். மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, தொழில்முனைவு, நோ்மறை எண்ணங்களை வளா்ப்பது, மனதை ஒருநிலைப் படுத்துவது தொடா்பாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் துறைத்தலைவா், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.