பழனியில் ரத்த தான முகாம்
பழனி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம், நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமை பயிலக முதல்வா் கந்தசாமி தொடக்கி வைத்தாா்.
அரிமா சங்கத் தலைவா் ஜாகீா் ஹீசேன், பொருளாளா் மகுடீஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மயில்சாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் ராஜேஸ்வரி, பழனி அரசு மருத்துவமனை குருதி வங்கி அலுவலா் முருகேஷ்குமாா் ஆகியோா் மாணவா்களிடமிருந்து ரத்தத்தை தானமாகப் பெற்றனா்.
முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் முத்து, ராஜலட்சுமி ஆகியோா் செய்தனா்.