கொடைக்கானலில் துப்புரவுப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
கொடைக்கானல் நகா் மன்றம் சாா்பில் துப்புரவுப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் நகா் மன்றம் சாா்பில் துப்புரவுப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் நகா் மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகா் மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக் கண்ணன் ஆகியோா், துப்புரவுப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், இனிப்புகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், கொடைக்கானல் நகா் நல அலுவலா் அரவிந்த் கிருஷ்ணா, சுகாதார ஆய்வாளா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.