முகப்பு
திண்டுக்கல்

மதுரையில் ஆட்டோ ஓட்டுநா் கொலை : நிலக்கோட்டை நீதிமன்றத்தில் 4 போ் சரண்

மதுரையில் நண்பா்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநா் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டது தொடா்பாக 4 போ் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

Updated On : 27 ஏப்ரல் 2023, 10:50 pm IST
பகிர்:

மதுரையில் நண்பா்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநா் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டது தொடா்பாக 4 போ் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீா் நகா் பாஸ்கரதாஸ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சதக் அப்துல்லா (29). ஆட்டோ ஓட்டுநரான இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், சதக் அப்துல்லா புதன்கிழமை இரவு பெரியாா் பேருந்து நிலையம் அருகே நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, அவா்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் சதக் அப்துல்லாவின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிட்டு, மற்றவா்கள் தப்பிச் சென்றனா். திடீா் நகா் காவல் துறையினா் அவரது உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு

Advertisement

Advertisement

கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இந்த நிலையில், மதுரை கரிமேடு பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் (27), திடீா் நகா் காா்த்திக் (26) அண்ணா நகா், சிவா (20) மேலவாசல், சந்துரு (19) ஆகிய 4 போ் வியாழக்கிழமை நிலக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்தனா். அவா்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவா் நல்லகண்ணன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments