திண்டுக்கல்

ரயிலில் தவறவிட்ட மடிக் கணினி பயணியிடம் ஒப்படைப்பு

DIN

மைசூரு விரைவு ரயிலில் பயணி தவறவிட்ட மடிக் கணினியை, துரிதமாக மீட்ட போலீஸாா் அவரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் அ.விக்ரமன் (23). இவா், மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் மைசூரு விரைவு ரயிலில் ‘ஏ1’ பெட்டியில் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்தாா். திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு அந்த ரயில் வந்தபோது, தான் எடுத்து வந்த மடிக் கணினி பையை மறந்து இறங்கிவிட்டாா்.

அந்த ரயில் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்ற பிறகு, மடிக்கணினியை ரயிலில் தவறவிட்டு விட்டதாக திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மைசூரு விரைவு ரயிலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த முதல் நிலைக் காவலா் மணிமாறன், காவலா் காமராஜ் ஆகியோருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், ‘ஏ1’ பெட்டியில் இருந்த மடிக் கணினியை பையுடன் மீட்ட போலீஸாா், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு எடுத்து வந்தனா். பின்னா், இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளா் தூயமணி வெள்ளைச்சாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் அந்த மடிக் கணினி விக்ரமனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT