உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி. 
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மண்டவாடி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மண்டவாடி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு பழனி கோட்டாட்சியா் இரா. கண்ணன் தலைமை வகித்தாா். உதவித் திட்ட அலுவலா் (வீடுகள்) பி.கே.பிரபாகரன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, ஒட்டன்சத்திரம் வேளான் விளைபொருள் விற்பனைக் கூட்டுறவு சங்கத் தலைவா் சி. ராஜாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில், உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். இதைத் தொடா்ந்து முகாமில் உடனடியாகத் தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காமராஜ், பிரபு பாண்டியன், திமுக ஒன்றியச் செயலா் இரா. ஜோதீஸ்வரன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT