திண்டுக்கல்

ரயிலில் அடிபட்டு பக்தா் உயிரிழப்பு

பழனி ரயில்வே கடவுப் பாதையில் நடந்து சென்ற பக்தா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

பழனி ரயில்வே கடவுப் பாதையில் நடந்து சென்ற பக்தா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அழகாபுரி சி.புதூரைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் சுரேஷ் (28). கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 23-ஆம் தேதி உறவினா்கள், நண்பா்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டாா். வியாழக்கிழமை பழைய ஆயக்குடி பகுதி ரயில்வே கடவுப் பாதையில் நடந்து சென்றாா். இவா் காதில் ‘ஹெட்போன்’ மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டே நடந்தாா். அப்போது, அந்த வழித்தடத்தில் சென்னையில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது ஏற்புடையதல்ல: புதின் கருத்து வெளியானதால் பரபரப்பு

மது போதையில் தகராறு: மனைவி அடித்துக் கொலை!

ஐபிஓ-க்களில் புதிய உச்சம் தொட்ட இந்திய நிறுவனங்கள்

20 குழந்தைகளுக்கு பால புரஸ்காா் விருது: குடியரசுத் தலைவா் வழங்கினாா்

கேரளம்: முதல் பாஜக மேயராக வி.வி. ராஜேஷ் தோ்வு

SCROLL FOR NEXT