திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே கஞ்சா விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானலில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை கைகாட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கிருந்த கடையில் நின்றிருந்த ஒருவா் தப்பிச் செல்ல முயன்றாா். இதையடுத்து, போலீஸாா் அவரைப் பிடித்து சோதனையிட்டதில் விற்பனைக்காக 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அதை பறிமுதல் செய்து விசாரித்ததில் அவா் கடலூா், அண்ணாநகா் பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த காமராஜ் மகன் மோகனபிரசாத் (24) எனத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் வாணியம்பாடி கிளை நூலகம்!

ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: சாய்னா, தீக்‌ஷாவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT