காலை உணவுத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 1,398 பள்ளிகளைச் சோ்ந்த 85,557 மாணவா்கள் பயன்பெற்று வருவதாக ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா்.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டம் குறித்து ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். திண்டுக்கல் மாநகராட்சி கென்னடி நினைவு தொடக்கப் பள்ளி, கூவனூத்து ஊராட்சி கவராயப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, விராலிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு செய்த பிறகு ஆட்சியா் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1,398 பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 85,557 மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் வெவ்வேறு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
காலை உணவுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களின் தரம் குறித்தும், உணவுப் பொருள் வைப்பறையின் பாதுகாப்பு, இருப்பு பதிவேடு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, குழந்தைகளின் கற்றல் திறன், வாசிப்புத் திறன் குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.