திண்டுக்கல்

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சோழியப்பகவுண்டன் புதூா் பாறையூரைச் சோ்ந்த முனியப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (27). இவா் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில் இவா் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் கரூா் நோக்கி சென்றாா். கோவிந்தபுரம் பிரிவு அருகே உள்ள வளைவில் திரும்பும் போது இரு சக்கர வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT