மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை
உசிலம்பட்டியில் காதல் திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி பெண், திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உசிலம்பட்டியில் காதல் திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி பெண், திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உசிலம்பட்டி மேலப்புதூர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகள் மாலாதேவி (32). இவர் பெற்றோர் சம்மதமின்றி, விருதுநகரைச் சேர்ந்த சரவணன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால், பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொள்ளாததால், மாலாதேவி மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், திங்கள்கிழமை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.