உசிலம்பட்டி அருகே 70 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கஞ்சாவை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கஞ்சாவை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள போலியப்பட்டியில் ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உசிலம்பட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் கல்யாணகுமார் ஆலோசனைப் படி, காவல் துறை ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலியப்பட்டியைச் சேர்ந்த சுப்பன் மகன் ஜெயக்குமார் (32), அய்யரதேவர் மகன் ராஜாதேவன்(45), ராமர் மகன் சந்திரன் (34) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.