மதுரை

ஏணியிலிருந்து தவறி விழுந்த கொத்தனார் பலி

மதுரை அருகே ஏணியிலிருந்து தவறி கீழே விழுந்த கொத்தானார் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

DIN


மதுரை அருகே ஏணியிலிருந்து தவறி கீழே விழுந்த கொத்தானார் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
     மதுரை அருகே சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் முத்துகருப்பு (38). கொத்தனாரான இவர், பரவை ஏஐபிஇஏ காலனியில் உள்ள ஒரு வீட்டில் ஏணி மீது ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த முத்துகருப்பை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.     இது குறித்து அவரது மனைவி பாண்டிச்செல்வி அளித்த புகாரின்பேரில், சமயநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT