மதுரை

வீட்டு மாடியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்தது.

DIN

மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, பேரையூர் அருகே கோபிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (53), தனது வீட்டின் மேல் தளத்தில் திறந்திருந்த அறையைப் பூட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் ராஜசேகர் உடல் கருகியது. அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் சென்று பார்த்த போது பலத்தக் காயங்களுடன் ராஜசேகர் உயிருக்கு போராடியுள்ளார். இதையடுத்து, அவரை மீட்டு அரசு  ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை  பலனின்றி ராஜசேகரன் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி வனசுந்தரி அளித்தப் புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT