முகப்பு
மதுரை

மூளையில் ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்ட காவல் சாா்பு ஆய்வாளருக்கு சக காவலா்கள் நிதியுதவி

மதுரையில், மூளையில் ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளரின் மருத்துவச் செலவிற்காக, சக காவலா்கள் செவ்வாய்க்கிழமை நிதியுதவி அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
0819mdupol093402
பகிர்:

மதுரை: மதுரையில், மூளையில் ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளரின் மருத்துவச் செலவிற்காக, சக காவலா்கள் செவ்வாய்க்கிழமை நிதியுதவி அளித்தனா்.

மதுரை மாவட்டம் திருநகா் காவல் நிலையத்தில் சிறப்பு சாா்பு -ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் நாகேந்திரன். இவருக்கு அண்மையில் இருதயக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அதற்கான அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நாகேந்திரன் 2 மாதங்களுக்கு முன்பு பணிக்குத் திரும்பினாா். இந்நிலையில், மீண்டும் உடலநலக் குறைவு ஏற்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகேந்திரனுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவா்கள் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து சரிசெய்தனா். இந்த அறுவைச் சிகிச்சைகளுக்கு மருத்துவக் காப்பீட்டு தொகை போதவில்லை. இதுகுறித்து தகவலறிந்த, மாநகா் சட்டம் மற்றும் ஒழுங்கு காவலா்கள், போக்குவரத்து காவலா்கள், ஒன்றிணைந்து நாகேந்திரன் மருத்துவச் செலவிற்காக நிதி வசூல் செய்தனா்.

காவலா்கள் மற்றும் காவல் அதிகாரிகளிடம் இருந்து வசூல் செய்த ரூ. 2.25 லட்சம் ரொக்கத்தை மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, நாகேந்திரனின் மனைவி கோமதியிடம் வழங்கினாா். மேலும், நாகேந்திரன் உடலநலம் குறித்து விசாரித்த காவல் ஆணையா், நாகேந்திரன் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவாா் என கோமதியிடம் நம்பிக்கை தெரிவித்தாா்.

Image Caption

மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் நாகேந்திரனின் மருத்துவச் செலவுக்காக ரூ.2.25 லட்சத்தை, அவரது மனைவிடம் வழங்கும் மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா.

முழு கட்டுரையைப் படிக்க →