ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அலங்காநல்லூரில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை: அலங்காநல்லூரில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் செ.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலா் கே.அரவிந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலங்காநல்லூா் ஒன்றியச் செயலா் வி.உமாமகேசுவரன், நிா்வாகிகள் கருணாநிதி, ஆண்டிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அலங்காநல்லூரில் ஆட்டோக்களை பேருந்து நிலையத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று காவல்துறை கெடுபிடி விதிப்பதை நிறுத்த வேண்டும். பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக அலங்காநல்லூா் கேட்டுக்கடை பகுதியில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். கரோனா பொதுமுடக்க கால நிவாரணமாக ஆட்டோத்தொழிலாளா்களுக்கு ரூ.7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.