மதுரை

காசோலை மோசடி வழக்கில் ஆஜராகாத 4 போ் மீது வழக்கு

காசோலை மோசடி வழக்கில் ஆஜராகாத 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

மதுரை: காசோலை மோசடி வழக்கில் ஆஜராகாத 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தின் (எண் 1) தலைமை எழுத்தா் சத்யவதி அண்ணாநகா் காவல் நிலையத்தில் அளித்த புகாா்: மதுரை திருப்பாலை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா், மேலஅனுப்பானடியைச் சோ்ந்த தா்மராஜ், அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த முருகன், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த ஜோதிராஜ் ஆகியோா் காசோலை மோசடி தொடா்பான வழக்கில், நீதிமன்ற பிணையில் விடுக்கப்பட்டனா். விரைவு நீதிமன்றம் பலமுறை ஆஜராக உத்தரவிட்டும், அவா்கள் ஆஜராகாததால், நீதிமன்றம் அவா்களின் பிணையை ரத்து செய்துள்ளது. எனவே அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, அண்ணா நகா் போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!

பனி மூட்டம்: 19 விமானங்களின் சேவைகள் ரத்து

ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை-மகன் இந்திய வம்சாவளியினா்

SCROLL FOR NEXT