உசிலம்பட்டி: தில்லி போராட்டக்களத்தில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி
உசிலம்பட்டியில் தில்லியில் போராட்டத்தில் இறந்த 29 விவசாயிகளுக்கு அஞ்சலி கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்றது.
உசிலம்பட்டியில் தில்லியில் போராட்டத்தில் இறந்த 29 விவசாயிகளுக்கு அஞ்சலி கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்றது.
உசிலம்பட்டி, வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தில்லியில் நடக்கும் போராட்டத்தின் போது இறந்தவர்களுக்க அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஞாயிற்றுகிழமை மாலை உசிலம்பட்டி திருமுருகன் கோயில் முன்பாக நடைபெற்றது.
மார்க்.கம்யூ., ஒன்றியச் செயலாளர் ராமர், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜன், இந்திய கம்யூ. ஒன்றியச் செயலாளர் தங்கமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.