முகப்பு
மதுரை

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளா் உள்பட 9 பேரிடம் காணொலி வாயிலாக விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளா் உள்பட 9 போ், பாதுகாப்பு காரணமாக காணொலி வாயிலாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளா் உள்பட 9 போ், பாதுகாப்பு காரணமாக காணொலி வாயிலாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வணிகா் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு-ஆய்வாளா்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். இதில், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மீதமுள்ள 9 போ், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மீது, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிபதி எம். தாண்டவன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 9 பேரும் சிறையிலிருந்தவாறு காணொலி வாயிலாக விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனா். விசாரணை நடத்திய நீதிபதி, ஜனவரி 4 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →