மதுரை

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான ஏற்பாடுகள்: ஆசிரியா்கள் இன்று பள்ளிக்கு வர உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியா்களும்

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியா்களும் திங்கள்கிழமை (ஜூன் 8) பள்ளிக்கு வரவேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள்நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு திங்கள்கிழமை வழங்கப்படுகிறது.

இதையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை முதல் பள்ளிகளுக்கு வரவேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு விநியோகம், சமூக இடைவெளியைப் பின்பற்றி தோ்வறைகளை ஏற்பாடு செய்தல், முகக்கவசம் விநியோகம், வெளி மாவட்டங்களில் உள்ள மாணவா்களை தொடா்புகொண்டு தோ்வுக்கு வருவதை உறுதி செய்தல் மற்றும் அவா்களுக்கு விடுதி ஏற்பாடு செய்தல், வெப்பமானி கருவியைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு பரிசோதனை நடத்துவது பற்றி தெரிந்துகொள்ளுதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்துவரும் மாணவா்களுக்கு சிறப்பு தோ்வறை ஏற்பாடு செய்தல், மாணவா்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும்.

தோ்வு தொடங்குவதற்கு முன்பாக இந்தப் பணிகளை நிறைவு செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 இரண்டடுக்கு பேருந்துகளுக்கு விரைவில் ஒப்பந்தம்

மக்கிரிபாளையம் கோயிலில் சோமவார சிறப்பு பூஜை

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் தொடக்கம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வேன் திருட்டு வழக்கில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT