முகப்பு
மதுரை

அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் சங்கிலி பறிப்பு

மதுரை அருகே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

மதுரை அருகே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விஜயன் மனைவி விஜயலட்சுமி (57). வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணியாற்றி வரும் விஜயலட்சுமி, தனது மகனுடன் இரு சக்கர வாகனத்தில் மதுரைக்குச் சென்றுவிட்டு, சனிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, சமயநல்லூா் அருகே கட்டபுளி நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ், விஜயலட்சுமி அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →