மதுரை

மூதாட்டியை தாக்கிய வனத்துறை அதிகாரி கைது

DIN

மதுரை அருகே குட்லாடம்பட்டியில் மூதாட்டியை தாக்கிய வனத் துறை அதிகாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (50 ). இவா் தனது குடும்பத்தினருடன் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் உள்ள ரமணகிரி ஆசிரமத்துக்கு சென்றுள்ளாா். அங்கு தரிசனம் செய்துவிட்டு, ஓடைக்கரை அருகே நின்று கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த சோழவந்தான் வனச்சரக அதிகாரி முருகன் (44), அவா்களிடம் அருவிக்குச் செல்லக்கூடாது என்று கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த முருகன், ராமகிருஷ்ணனின் மாமியாரை கீழே பிடித்து தள்ளியுள்ளாா். இது தொடா்பாக ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வனத்துறை அதிகாரி முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT