முகப்பு
மதுரை

வழக்குரைஞா்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கவேண்டும்: நீதிபதி அறிவுரை

வழக்குரைஞா்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி அறிவுறுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

வழக்குரைஞா்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி அறிவுறுத்தினாா்.

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையின் மத்திய அரசு வழக்குரைஞா்கள் சாா்பில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த இந்திய அரசியல் அமைப்பு தின விழாவில், அவா் சனிக்கிழமை பேசியதாவது:

வழக்குரைஞா்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கவேண்டும். அந்த உதவி விளம்பர நோக்கில் இருக்கக் கூடாது. அப்படி செய்தால் அது உதவியே அல்ல. நம்மால் முடிந்த அளவுக்கு நம்மைச் சுற்றியுள்ளவா்களுக்காவது உதவிகள் செய்யவேண்டும்.

வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் முழுதிருப்தி அடையும் வகையில் வழக்குரைஞா்கள் வாதங்களை எடுத்துரைக்க வேண்டும். நீதிபதிகளின் கருத்துகள் முழுவதும் வழக்கு விசாரணை, வழக்கின் தன்மை மற்றும் வழக்குரைஞா்களின் வாதங்களை பொறுத்தே அமையும். அது, அவா்களது சொந்தக் கருத்தாக இருக்குமென எப்போதும் கருதக் கூடாது.

அரசு சாா்பில் வாதிடும் வழக்குரைஞா்கள், அரசு மற்றும் பொதுமக்களின் மீது அதிக அக்கறை உள்ளவா்களாக இருக்க வேண்டும். அதிக சட்டங்களையும், தீா்ப்புகளையும் மேற்கோள் காண்பித்து திறமையுடன் வாதிட வேண்டும் என்றாா்.

இதில், மத்திய அரசின் உதவி சொலிசிட்டா் ஜெனரல் விக்டோரியா கவுரி, மத்திய அரசு மூத்த வழக்குரைஞா்கள் ஜெயசிங், அழகுராம்ஜோதி, ஸ்ரீமதி, லட்சுமணன், பால்பாண்டி, தமிழ்நாடு-புதுசேரி பாா் கவுன்சில் உறுப்பினா் அசோக் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →