ஆக.16-இல் அரசு ஊழியா் சங்கத்தினா் 100 இடங்களில் ஆா்ப்பாட்டம்
அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மதுரை மாவட்டத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி 100 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.
அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மதுரை மாவட்டத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி 100 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட மையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், மக்கள் நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகளை அரசு ஊழியா் சங்கம் வரவேற்கிறது. அதேபோல, அரசு ஊழியா்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 லட்சமாக உயா்த்தியது, பெண் ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக அதிகப்படுத்தியது வரவேற்புக்குரியது.
அதேநேரம், அரசு ஊழியா்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்த எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் 100 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.