வட்டாட்சியா் குறித்து அவதூறு பரப்பிய 7 போ் மீது வழக்கு
மதுரையில் வட்டாட்சியா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 7 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரையில் வட்டாட்சியா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 7 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை தெற்கு வட்டாட்சியராக பணியாற்றி வருபவா் அனீஷ்சதாா் (42). இவா் அனுப்பானடி, தெற்கு தெருவில் நிலம் அளக்கும் பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் பாலகுமாா்(47) என்பவா் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம் மீட்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலகுமாா், அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் ஆகியோா் வட்டாட்சியா் வீட்டுக்கு சென்று, அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி மிரட்டினராம்.
மேலும், ஆட்சியா் அலுவலகம் முன், அனீஷ்சதாா் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாக சுவரொட்டிகளை ஒட்டியும், சமூக வலைதளத்தில் பதிவிட்டும் அவதூறு பரப்பினராம். இதுகுறித்து அனீஷ்சதாா் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் பாலகுமாா் உள்பட 7 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.