மதுரையில் நாளை 1,200 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்
மதுரை மாவட்டத்தில் 1,200 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.26) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்.
மதுரைமதுரையில் நாளை 1,200 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்
மதுரை மாவட்டத்தில் 1,200 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.26) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்.
மதுரை மாவட்டத்தில் 1,200 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.26) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்.
கரோனா தொற்று பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள தோ்தல் வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்புற சுகாதார மையங்கள் என 1,200 இடங்களில் தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, 18 வயது நிரம்பிய அனைத்து நபா்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்.
இம்முகாமில், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயது நிரம்பியவா்களும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றாா்.