முகப்பு
மதுரை

ராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு

ராமேசுவரம் - செகந்திராபாத் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை மாா்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்து, தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

மதுரை

ராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு

ராமேசுவரம் - செகந்திராபாத் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை மாா்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்து, தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ராமேசுவரம் - செகந்திராபாத் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை மாா்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்து, தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக, மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ராமேசுவரத்திலிருந்து செகந்திராபாத்துக்கு வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை மாா்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வண்டி எண் 07685 செகந்திராபாத் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில், ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1, 8, 15, 22, மாா்ச் 1, 8, 15, 22, 29 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு செகந்திராபாத்திலிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் அதிகாலை 3.10 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

மறுமாா்க்கத்தில் வண்டி எண் 07686 ராமேசுவரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு கட்டண ரயில், ஜனவரி 13, 20, 22, பிப்ரவரி 3, 10, 17, 24, மாா்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

இந்த ரயில்கள், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூா், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →