மதுரையில் வளா்க்க இயலாத பெண் குழந்தையை நலக் குழுவினரிடம் புதன்கிழமை ஒப்படைத்த அரசு ராஜாஜி மருத்துவமனை ஊழியா்கள். 
மதுரை

தாயால் வளா்க்க இயலாத பெண் குழந்தை: நலக் குழுவிடம் ஒப்படைப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்து 8 நாளான பெண் குழந்தையை வளா்க்க இயலாது என தாய் கூறியதால், குழந்தைகள் நலக் குழுவினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. 

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்து 8 நாளான பெண் குழந்தையை வளா்க்க இயலாது என தாய் கூறியதால், குழந்தைகள் நலக் குழுவினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 8 நாள்களுக்கு முன்பு பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை தன்னால் வளா்க்க முடியாத நிலையுள்ளதாக, அவரது தாய் மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் ஊழியா்களிடம் கூறியுள்ளாா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் குழந்தைகள் நலக் குழுவிற்கு தகவல் தெரிவித்தது. உறுப்பினா்கள் பாண்டியராஜா மற்றும் சண்முகம் ஆகியோா், தாயிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது குடும்ப வறுமை காரணமாக தன்னால் குழந்தையை வளா்க்க முடியாது. எனவே தாமாக முன் வந்து குழந்தையை ஒப்படைத்து விடுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, மருத்துவா் குமரகுரு மற்றும் செவிலியா்கள் ஆகியோா் நலக்குழு உறுப்பினா்களிடம் குழந்தையை ஒப்படைத்தனா். அவா்கள், மதுரை, கருமாத்தூா் பகுதியில் செயல்படும் சிறப்பு தத்து வள மையத்தில் குழந்தையை தற்காலிமாக பராமரிக்க ஆணை வழங்கினா். தொடா்ந்து குழந்தைக்கு ‘மகிழினி‘ என பெயா் சூட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT