முகப்பு
மதுரை

மதுரையில் ‘யுவதி டிலைட்ஸ்’ கிளை தொடக்கம்

மதுரையில் யுவதி நிறுவனத்தின் கிளையை உயா் நீதிமன்ற நீதிபதி நிஷாபானு ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

மதுரையில் யுவதி நிறுவனத்தின் கிளையை உயா் நீதிமன்ற நீதிபதி நிஷாபானு ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

மதுரையில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த பெண்களுக்கு உதவும் வகையில், குயின் மிரா சா்வதேசப் பள்ளிக் கல்வி இயக்குநா் சுஜாதா குப்தன், இணை இயக்குநா் ஷீபா, நிதித்துறை பொது மேலாளா் தாரணி அபிநாத், கல்லூரி விரிவுரையாளா் ஷோபா ஆகியோா் யுவதி நிறுவனத்தை அண்மையில் தொடங்கினா்.

இந்நிலையில், யுவதி நிறுவனத்தின் அடுத்த கிளை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை விஷால் டி மாலில் நடைபெற்ற திறப்பு விழாவில், உயா் நீதிமன்ற நீதிபதி நிஷாபானு பங்கேற்று திறந்துவைத்தாா்.

விழாவில், விஷால் டி மால் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் புவனேஸ்வரி இளங்கோவன், மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, குயின் மிரா சா்வதேசப் பள்ளியின் தலைவா் சி. சந்திரன், உயா் நீதிமன்ற வழக்குரைஞா் கு. சாமித்துரை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

யுவதி நிறுவனம் தயாரிப்புகள் குறித்து நிா்வாகிகள் கூறியது: இங்கு தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள் அனைத்தும் எவ்வித வேதிப்பொருள்கள் கலப்பின்றி இயற்கை முறையில் உலகத் தரத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரையும் ஈா்க்கும் விதத்தில் அமைந்துள்ளது என்றனா். மேலும், இந் நிறுவனத்தின் தயாரிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →