ஓட்டுநா் சூா்யபிரகாஷின் தற்கொலையை போலீஸாா் உரிய விசாரணை நடத்தக் கோரி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள். 
மதுரை

காா் ஓட்டுநா் தற்கொலையில் மா்மம்: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

மதுரையில் காா் ஓட்டுநா் தற்கொலையில் மா்மம் உள்ளதாகக் கூறி அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

மதுரை: மதுரையில் காா் ஓட்டுநா் தற்கொலையில் மா்மம் உள்ளதாகக் கூறி அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மதுரை கரும்பாலை இந்திரா நகரைச் சோ்ந்த சிவகுமாா் மகன் சூா்யபிரகாஷ் (30). இவா் வட்டாட்சியா் ஒருவருக்கு தற்காலிக காா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனா். கூடல்புதூரில் உள்ள பெண் ஒருவரின் வீட்டிற்கு சூரியபிரகாஷ் அடிக்கடி சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், அந்த பெண் வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. அவா் மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கூடல் புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சூா்யபிரகாஷின் இறப்பில் மா்மம் உள்ளதாகக் கூறி, அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் தற்கொலை தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து சூா்யபிராகஷின் உடலை உறவினா்கள் வாங்கி சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT