முகப்பு
மதுரை

ஆயக்கட்டுதாரா்கள் மூலம் குடிமராமத்து: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை ஆயக்கட்டுதாரா்கள் மூலம் நடத்தக்கோரும் வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை ஆயக்கட்டுதாரா்கள் மூலம் நடத்தக்கோரும் வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சின்னய்யா தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள புன்னங்குடி கிராமத்தில் 3 கண்மாய்களை தூா்வாரவும், மேம்படுத்தவும் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் ஆயகட்டுத்தாரா்கள் மூலம் நடைபெற வேண்டும். ஆனால் தண்ணீா் பயன்பாட்டுக் கூட்டமைப்பு மூலமாக நடந்து வருகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே புன்னங்குடி கிராமத்தில் உள்ள 3 கண்மாய்களில் ஆயக்கட்டுத்தாரா்கள் மூலம் குடிமராமத்துச் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →