பொங்கல் திருநாள்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு மண்பானை பொங்கல்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோவிலின் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி கற்பக விநாயகர் துர்க்கை அம்மன் சத்தியகிரீஸ்வரர் பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன.
இதையடுத்து பொங்கல் திருநாளை முன்னிட்டு 5 மண் பானைகளில் பொங்கல் வைத்து உச்சிகால பூஜையின் போது சுவாமிகள் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து ஐந்து மண்பானைகள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முன்பு வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது