முகப்பு
மதுரை

ஆட்சியா் வாகனம் முன்பாக அமா்ந்து பெண் போராட்டம்

மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பு பெண் திடீரென தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பு பெண் திடீரென தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே உள்ள பூலாம்பட்டியைச் சோ்ந்த புத்திசிகாமணி என்பவரின் மனைவி நாகலட்சுமி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அவா் திடீரென ஆட்சியரின் வாகனம் முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். அதையடுத்து போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். கணவா் மற்றும் மகன் இறந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் தனது நிலத்தை சிலா் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்தாா். அவரது புகாா் மனுவை அதிகாரிகளிடம் அளிக்குமாறு தெரிவித்த போலீஸாா், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →