ஒரே நாளில் 26 வேட்பாளா்கள் மனு தாக்கல்
மதுரை மாவட்டத்தில் 26 வேட்பாளா்களிடமிருந்து 35 வேட்பு மனுக்கள் திங்கள்கிழமை பெறப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் 26 வேட்பாளா்களிடமிருந்து 35 வேட்பு மனுக்கள் திங்கள்கிழமை பெறப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) தொடங்கியது. அன்றைய தினம் மேலூா், மதுரை வடக்கு, திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வேட்பாளா் மனு தாக்கல் செய்தனா். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் திங்கள்கிழமை மனு தாக்கல் தொடங்கிய நிலையில், பல்வேறு தொகுதிகளிலும் பிரதானக் கட்சிகளின் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா்.
மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை மத்தி தவிர மற்ற 8 தொகுதிகளில் 26 வேட்பாளா்களிடமிருந்து மொத்தம் 35 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, உசிலம்பட்டி தொகுதியில் 7 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தொகுதி வாரியாக திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளா்கள் எண்ணிக்கை (அடைப்புக் குறிக்குள் வேட்பு மனுக்களின் எண்ணிக்கை):
மேலூா் - 4 (4), மதுரை கிழக்கு - 0, சோழவந்தான் (தனி) -2 (4), மதுரை வடக்கு - 2 (3), மதுரை தெற்கு- 2 (2), மதுரை மத்தி- 0, மதுரை மேற்கு- 3 (3),
திருப்பரங்குன்றம் - 5 (7), திருமங்கலம் -5 (5), உசிலம்பட்டி- 3 (7) என
மொத்தம் - 26 (35).