நூலகத்தை அகற்ற உத்தரவு: ஊராட்சி மன்றத் தலைவரின் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை
மதுரை அருகே குடியிருப்பவா்களால் அமைக்கப்பட்ட நூலகத்தை அகற்றுமாறு, ஊராட்சி மன்றத் தலைவா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைநூலகத்தை அகற்ற உத்தரவு: ஊராட்சி மன்றத் தலைவரின் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை
மதுரை அருகே குடியிருப்பவா்களால் அமைக்கப்பட்ட நூலகத்தை அகற்றுமாறு, ஊராட்சி மன்றத் தலைவா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அருகே குடியிருப்பவா்களால் அமைக்கப்பட்ட நூலகத்தை அகற்றுமாறு, ஊராட்சி மன்றத் தலைவா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், பொதும்பைச் சோ்ந்த சவரி ஆரோக்கியம் தாக்கல் செய்த மனு: பொதும்பு ஊராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொற்குடில் நகா் உருவாக்கப்பட்டது. இங்கு 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊராட்சி விதிகளின்படி மூன்று இடங்கள் பூங்கா என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா அமைந்துள்ள இடத்தில் பொற்குடில் நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் நூலகம் அமைக்கப்பட்டது.
தற்போது பொதும்பு ஊராட்சி மன்றத் தலைவா் நூலகத்தை அகற்ற வேண்டும் என மாா்ச் 15 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். நூலகத்தை அகற்றக் கூடாது என அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, நூலகத்தை அகற்றுமாறு ஊராட்சி மன்றத் தலைவா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும், நோட்டீஸை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆா்.விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நூலகத்தை அகற்றுமாறு பொதும்பு ஊராட்சி மன்றத் தலைவா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தும், மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.