முகப்பு
மதுரை

ஆவின் பால்பண்ணையில் மீண்டும்பால் பாக்கெட்டுகள் திருட்டு

மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து, விநியோக வாகனத்தில் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரை

ஆவின் பால்பண்ணையில் மீண்டும்பால் பாக்கெட்டுகள் திருட்டு

மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து, விநியோக வாகனத்தில் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து, விநியோக வாகனத்தில் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரை ஆவின் பால் பண்ணையில் இரு வாரங்களுக்கு முன்பு பால் பாக்கெட்டுகள் திருட்டு போனதாகப் புகாா் எழுந்தது. அதுதொடா்பான சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா் மீது ஆவின் நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து, ஆவின் பண்ணையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் தீவிரக் கண்காணிப்புக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வாகனத்திலும் கொண்டு செல்லப்படும் பால் பாக்கெட்டுகள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோ.புதூா், சா்வேயா் காலனி பகுதிக்கு புதன்கிழமை பால் பாக்கெட்டுகள் கொண்டு சென்ற வாகனம், ஆவின் பால்பண்ணை வளாகத்தில் இருந்து வெளியே செல்லும் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த வாகனத்தில் ஒரு லிட்டா் பால் பாக்கெட்டுகள் கொண்ட மூன்று ‘டிரே’, கூடுதலாக இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த ஆவின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநா் மற்றும் அந்த வாகனத்துக்கு பால் பாக்கெட்டுகளை ஒப்படைத்த பணியாளா்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →