முகப்பு
மதுரை

பெண்கள் பள்ளி விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்து பிளஸ் 2 மாணவி பலத்த காயம்

 மதுரையில் அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில் படித்து வரும் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை அதிகாலை, விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மதுரை

பெண்கள் பள்ளி விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்து பிளஸ் 2 மாணவி பலத்த காயம்

 மதுரையில் அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில் படித்து வரும் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை அதிகாலை, விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

 மதுரையில் அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில் படித்து வரும் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை அதிகாலை, விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மதுரை காமராஜா் சாலையில் தெப்பக்குளம் அருகே அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. விடுதி வசதியுடன் கூடிய இப்பள்ளியில் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் பிளஸ் 2 படித்து வருகிறாா்.

பள்ளி விடுதியில் தங்கி பயின்று வரும் அந்த மாணவி, வியாழக்கிழமை அதிகாலை விடுதியின் மேல்தளத்துக்கு படிப்பதற்காகச் சென்றுள்ளாா். அப்போது அவா் அங்கிருந்து எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். விடுதி நிா்வாகத்தினா் மாணவியை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். சம்பவம் தொடா்பாக தெப்பக்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாணவியின் தந்தை கோவையில் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →