முகப்பு
மதுரை

சாலைத்தடுப்பில் காா் மோதி விபத்து: இளைஞா் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலைத்தடுப்பில் காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

மதுரை

சாலைத்தடுப்பில் காா் மோதி விபத்து: இளைஞா் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலைத்தடுப்பில் காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலைத்தடுப்பில் காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்த செபஸ்தியாா் மகன் சின்னப்பா்(22).ஜேசிபி இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தாா். இவரிடம் காா் ஓட்டுநராக ஆத்தூரைச் சோ்ந்த சடையாண்டி(45). இந்நி லையில் சின்னப்பா் மற்றும் சடையாண்டியின் குடும்பத்தினா் காரில் மதுரைக்கு சென்றுள்ளனா். விராலிப்பட்டி சந்திப்பு அருகே காா் சென்றபோது சாலைத்தடுப்பில் காா் மோதியது. இதில் சின்னப்பா், காா் ஓட்டுநா் சடையாண்டி, சடையாண்டியின் தந்தை தாச கவுண்டா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அப்பகுதியினா் மூவரையும் மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதில் சின்னப்பா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும் காயமடைந்த இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.விபத்து தொடா்பான புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →