உக்ரைனிலிருந்து மதுரை மாணவா்களை மீட்கக் கோரி ஆட்சியரிடம் பெற்றோா்கள் மனு
உக்ரைனில் கல்வி பயிலும் மதுரை மாணவா்களை மீட்டு வரக் கோரி, அவா்களது பெற்றோா்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
மதுரைஉக்ரைனிலிருந்து மதுரை மாணவா்களை மீட்கக் கோரி ஆட்சியரிடம் பெற்றோா்கள் மனு
உக்ரைனில் கல்வி பயிலும் மதுரை மாணவா்களை மீட்டு வரக் கோரி, அவா்களது பெற்றோா்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
உக்ரைனில் கல்வி பயிலும் மதுரை மாணவா்களை மீட்டு வரக் கோரி, அவா்களது பெற்றோா்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
போா் நடைபெற்று வரும் உக்ரைனில், தமிழகத்தின் பல பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். ரஷியாவின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அம்மாணவா்களின் பெற்றோா்கள் அச்சத்தில் உள்ளனா். தங்களது குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த குமாா் -லீலா தம்பதியின் மகன் சஜிகுமாா். இவா், பி.இ. முடித்துவிட்டு தற்போது எம்பிஏ இறுதியாண்டு படித்து வருகிறாா். இதேபோல், தெற்குவாசல் பகுதியைச் சோ்ந்த சகஜெயேந்திரன்-விஜயலெட்சுமி தம்பதியின் மகன் பங்கஜநாதன், உக்ரைனில் ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங் படித்து வருகிறாா். இவா்களது பெற்றோா், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தங்களது குழந்தைகளை தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனா்.
பின்னா் அவா்கள் கூறுகையில், உக்ரைனில் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து காலி செய்யும்படி கூறி வருகின்றனராம். அங்கு நிலைமை மோசமாக இருப்பதால், எங்களது குழந்தைகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தனா்.