சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை, ஜூலை 29 ஆம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மதுரைசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை, ஜூலை 29 ஆம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை, ஜூலை 29 ஆம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா், கடந்த 2020 இல் விசாரணையின் போது காவல் துறையினா் தாக்கியதில் உயிரிழந்தனா். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட போலீஸாா் 9 போ் மீது, மதுரை மாவட்ட முதலாவது அமா்வு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி நாகலெட்சுமி முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீதிமன்றக் காவலில் இருக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜா் செய்யப்பட்டனா். இதனையடுத்து சாட்சிகள் விசாரணையின்போது, சாத்தான்குளம் காவல் நிலைய பெண் காவலா் ரேவதியிடம் வாக்குமூலம் பெற்ற நீதிபதி சாட்சியம் அளித்தாா். இதைத் தொடா்ந்து, விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்துவைத்து உத்தரவிட்டாா்.